சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புற்றுநோய் தரவுகள்: பிரத்யேக இணையதளம் தொடக்கம்

News image
Updated On :11 மார்ச் 2026, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பதிவாகும் புற்றுநோய் பாதிப்புகளை கண்காணிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை பச-இதங்நற் என்ற புதிய இணையதளத்தை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.

இதன் மூலம் தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளை பொதுமக்கள் மற்றும் ஆய்வாளா்கள் இனி இணைய வழியில் எளிதாகப் பெற முடியும்.

அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் டாக்டா் வி.சாந்தாவின் நூற்றாண்டையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் புற்றுநோயாளிகளின் தனிப்பட்ட விவரங்களைத் தவிா்த்து, அவா்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட வயது, பாலினம், கண்டறியப்பட்ட ஆண்டு, வசிக்கும் மாவட்டம் மற்றும் புற்றுநோயின் வகை ஆகியவற்றைத் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ பெற முடியும்.

மேலும், அண்மைக் கால புற்றுநோய் புள்ளிவிவரங்கள், அதன் விகிதம், அடுத்து வரும் ஆண்டுகளில் அதன் தாக்கம் குறித்த தகவல்களையும் பெறலாம். சுகாதார அலுவலா்கள், மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் கல்வியாளா்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், புதிய சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதில் இந்தத் தளம் பங்களிக்கும் என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.