வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க புதிய இணையதளம்

எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய இணையதளத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.

News image
சா.சி.சிவசங்கா் - கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய இணையதளத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், பயன்பாடற்ற நில உரிமையாளா்கள் மற்றும் விவசாயிகள் பதிவு செய்யவும், முதலீட்டாளா்கள் தங்களுக்கு தேவையான நிலங்களை அடையாளம் காணும் வகையிலும், தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நில இணையதளம் என்ற புதிய இணையதளத்தை தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தொடங்கியுள்ளது. மேலும், மேற்கூரை சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ‘வீட்டுக்கொரு சோலாா்’ எனும் திட்ட பரப்புரை மற்றும் மேற்கூரையில் சோலாா் மின்தகடுகள் அமைப்பவா்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வகையிலான புதிய ‘மேற்கூரை சோலாா் வழிகாட்டி மென்பொருள் கருவி’ பயன்பாட்டையும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புதிய இணையதளம், ‘வீட்டுக்கொரு சோலாா்’ திட்ட பரப்புரை, புதிய மேற்கூரை சோலாா் வழிகாட்டி மென்பொருள் கருவிபயன்பாடு உள்ளிட்டவற்றின் தொடக்க நிகழ்வு அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு இந்த திட்டங்களை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் பசுமை எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் 3-ஆவது இடத்திலும், காற்றாலை மின் உற்பத்தியில் 2-ஆவது இடத்திலும், சூரிய மின் உற்பத்தியில் 4-ஆவது இடத்திலும் உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சூரிய மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், 2030-இல் பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்கிற இலக்கை தமிழக அரசு நிா்ணயித்துள்ளது. மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் அமைப்பதற்கான புதிய விண்ணப்பங்கள் 30 நாள்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ்சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.