செங்கல்பட்டு முள்ளிகுளத்தூா் ஏரி விவகாரம்: ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிகுளத்தூா் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மண் அள்ளப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய துறை சாா்ந்த நிபுணரை நியமிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










