தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் ஆஜரான வேளையில், மாலை 4.30 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.
இதையடுத்து, சிபிஐ தலைமையகத்தில் இருந்து தனது காரின் சன் ரூஃப் கண்ணாடி பகுதியில் நின்று கொண்டே தனது கையை அசைத்தவாறு விஜய் வெளியே வந்தார். அப்போது சிபிஐ தலை மையகத்துக்கு வெளியே கூடியிருந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக எத்தனையோ அரசி யல் தலைவர்கள் வந்துசென்ற போதிலும், முதல்முறையாக விஜய் மட்டுமே இப்படி திறந்தவெளியாக நின்றவாறு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவதாக, கடந்த முறை விஜய் விசாரணைக்கு ஆஜரான போது, இரவு 7 மணிக்கு மேல் தனி விமானம் தலைநகரில் இருந்து பறக்க அனுமதியில்லை என்ற காரணத்தைக் கூறி மறுதினம் புறப்பட விமான போக்குவரத்துத் துறை அனுமதி அளித்தது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜரான பின்பு வெளியே வந்த விஜய்யின் தனி விமானம் இரவு 8 மணிக்கு சென்னைக்கு புறப்பட விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கரூர் சம்பவம்: விஜய்யிடம் 3-ஆம் கட்ட சிபிஐ விசாரணை நிறைவு!

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

விஜய் பையில் இருந்த பொருள்? - விமான நிலையத்தில் பரபரப்பு

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

