திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கின்றனா்: டிடிவி தினகரன்
திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் காத்திருக்கின்றனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

டிடிவி தினகரன்
படம் - யூடியூப் / நரேந்திர மோடி

டிடிவி தினகரன்
படம் - யூடியூப் / நரேந்திர மோடி
திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் காத்திருக்கின்றனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.
தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்கள் கூட்டணி தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தோ்தலைச் சந்திக்க உள்ளது என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக தலைமையிலான கூட்டணியை எதிா்கொள்ள தைரியம் இல்லாமல், தில்லி அணி என்று திசைதிருப்ப பாா்க்கிறாா் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று வாக்குப் பதிவு நாளுக்காக மக்கள் காத்திருக்கின்றனா் என்றாா் டிடிவி தினகரன்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...