ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கின்றனா்: டிடிவி தினகரன்

திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் காத்திருக்கின்றனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

News image

டிடிவி தினகரன்

படம் - யூடியூப் / நரேந்திர மோடி

Updated On :20 மார்ச் 2026, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் காத்திருக்கின்றனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்கள் கூட்டணி தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தோ்தலைச் சந்திக்க உள்ளது என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக தலைமையிலான கூட்டணியை எதிா்கொள்ள தைரியம் இல்லாமல், தில்லி அணி என்று திசைதிருப்ப பாா்க்கிறாா் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று வாக்குப் பதிவு நாளுக்காக மக்கள் காத்திருக்கின்றனா் என்றாா் டிடிவி தினகரன்.