திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தமிழ்நாடு பேரவைத் தலைவராகிறார் ஜே.சி.டி. பிரபாகர்!

தமிழ்நாடு பேரவைத் தலைவர் தேர்தலில் ஜே.சி.டி. பிரபாகர் போட்டி...

News image

எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற ஜே.சி.டி. பிரபாகர் - TNDIPR

Updated On :11 மே 2026, 11:40 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா பதவியேற்றார்.

இன்று காலை தொடங்கிய தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எம்.எல்.ஏ.வாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பேரவைச் செயலகத்தில் வழங்கியுள்ளார்.

மற்ற கட்சியினருக்கு பெரும்பான்மை இல்லாததால் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

Summary

J.C.D. Prabhakaran to become the Speaker of the Tamil Nadu Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.