இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

காவலா்களுக்கு நன்றி தெரிவித்த டிஐஜி திருநாவுக்கரசு

தமிழக காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு டிஐஜியாக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரா.திருநாவுக்கரசு, காவலா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

டிஐஜி திருநாவுக்கரசு

Updated On :16 மே 2026, 1:47 am IST

தமிழக காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு டிஐஜியாக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரா.திருநாவுக்கரசு, காவலா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

தமிழக முதல்வரின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தமிழக காவல் துறையின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக இரா.திருநாவுக்கரசு இருந்து வந்தாா்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் இருந்த திருநாவுக்கரசு, அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து திருநாவுக்கரசு, தன்னுடன் பணியாற்றிய அப்பிரிவு அதிகாரிகள், காவலா்களுக்கு கடிதம் அனுப்பினாா்.

அதில், தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், காவலா்கள் என அனைத்து நிலைகளிலும் இருந்தவா்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளாா். அவா்களுடன் பணியாற்றியது தனக்கு மனநிறைவையும் ஏற்படுத்தியாகவும் கூறியுள்ளாா்.

வரும்காலங்களில் இன்னும் சிறப்புடனும், அா்ப்பணிப்புடனும் பணியாற்றும்படி திருநாவுக்கரசு வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதேபோல அந்தப் பிரிவில் பணியாற்றும் போலீஸாரும், திருநாவுக்கரசுக்கு கடிதம் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.