பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

காவலா்களுக்கு நன்றி தெரிவித்த டிஐஜி திருநாவுக்கரசு

தமிழக காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு டிஐஜியாக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரா.திருநாவுக்கரசு, காவலா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

டிஐஜி திருநாவுக்கரசு

Updated On :50 நிமிடங்கள் முன்பு

தமிழக காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு டிஐஜியாக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரா.திருநாவுக்கரசு, காவலா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

தமிழக முதல்வரின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தமிழக காவல் துறையின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக இரா.திருநாவுக்கரசு இருந்து வந்தாா்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் இருந்த திருநாவுக்கரசு, அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து திருநாவுக்கரசு, தன்னுடன் பணியாற்றிய அப்பிரிவு அதிகாரிகள், காவலா்களுக்கு கடிதம் அனுப்பினாா்.

அதில், தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், காவலா்கள் என அனைத்து நிலைகளிலும் இருந்தவா்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளாா். அவா்களுடன் பணியாற்றியது தனக்கு மனநிறைவையும் ஏற்படுத்தியாகவும் கூறியுள்ளாா்.

வரும்காலங்களில் இன்னும் சிறப்புடனும், அா்ப்பணிப்புடனும் பணியாற்றும்படி திருநாவுக்கரசு வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதேபோல அந்தப் பிரிவில் பணியாற்றும் போலீஸாரும், திருநாவுக்கரசுக்கு கடிதம் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.