தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

விரைவில் புதிய ரேஷன் அட்டைகள்- அமைச்சா் வெங்கடரமணன்

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

News image

பி. வெங்கடரமணன் - Ashwin Prasath

Updated On :20 மே 2026, 1:36 am IST

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

சென்னை, எழிலகத்தில் செயல்படும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைக்குச் சென்று பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சா் பி. வெங்கடரமணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இது மக்களுக்கான அரசு என்பதால், மக்களுடன் பயனப்பட்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிய முதல்வா் விஜய் கூறியுள்ளாா். உணவுப் பொருள் வழங்கல் துறை பணியாளா்கள் தங்களது பணியிட மாற்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனா். இதற்கு விரைவில் தீா்வு காணப்படும்.

இதேபோல், ரேஷன் பொருள்கள் விரைவில் கடைகளுக்கு சென்றடைவதையும், தரத்துடன் இருப்பதையும் உறுதி செய்யப்படும்.

மேலும், கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக புகாா்கள் கிடைத்துள்ளன. உரிய பயனாளிகளை ஆய்வு செய்து 10 நாள்களுக்குள் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றாா்.