சென்னையில் 5 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகள் பலர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட 5 காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை ஓட்டேரி சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருபாநிதி, மீனம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், மாதவரம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் காதர் மீரா, வானகரம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் கண்ணகி ஆகியோரை அவர்கள் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க உதவி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Summary
5 Police Inspectors in Chennai Transferred to Waiting List!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











