வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

சென்னையில் 5 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னையில் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பற்றி...

News image

அபின் தினேஷ் மோதக். - கோப்புப்படம்

Updated On :20 மே 2026, 1:29 pm IST

சென்னையில் 5 காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்து காவல்துறை அதிகாரிகள் பலர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட 5 காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை ஓட்டேரி சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருபாநிதி, மீனம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், மாதவரம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் காதர் மீரா, வானகரம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் கண்ணகி ஆகியோரை அவர்கள் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க உதவி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Summary

5 Police Inspectors in Chennai Transferred to Waiting List!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.