பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர உத்தரவு!

பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர உத்தரவு...

News image

கோப்புப் படம் - DPI

Updated On :23 மே 2026, 2:18 pm IST

பள்ளிக்கல்வித் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தினமும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிக்கை விடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள்ளாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை பணியாளா்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

அலுவலக உதவியாளர்கள், கிளார்க் அனைவரும் காலை 9.30 மணிக்கே அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

விடுப்பு பெறுவது என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முன்னரே அனுமதி பெற வேண்டும். விடுப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

இவை அனைத்தும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவ்வாறு பின்பற்றத் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Story image

Summary

School Education Department officials and staff ordered to report to the office by 10 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.