டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
சென்னையில் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும். எஃப்எல்2 மற்றும் எஃப்எல்3 கடைகள் முறையே இரவு 10 மற்றும் 12 மணிக்குள் மூட வேண்டும். இவற்றை காவல் துறை அதிகாரிகள் கண்காணித்து, புகைப்படங்களை குழுவில் பதிவிட வேண்டும்.
டாஸ்மாக் கடைகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்கள், நேரத்தைத் தவிர, வேறு எங்கும் விற்பனை செய்யக்கூடாது.
90 நாள்களுக்கு மேல் கொலை வழக்குகள் விசாரணையில் இருக்கக் கூடாது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
புகார்களின் மீது தாமதமின்றி சிஎஸ்ஆர்/எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். உத்தரவுகளைக் கடைபிடித்து, திறமையுடன் பணியாற்ற வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Chennai Police Commissioner Abin Dinesh Modak has ordered that TASMAC shops be closed by 10 PM.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்

மங்கை மடம் டாஸ்மாக் கடை மூடப்படுமா?

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!
விடியோக்கள்

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு


