பிரதமரைச் சந்திக்க தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவதாகத் தகவல்!மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது!
/

தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்! இன்று மாலை 4 மணிக்கு பிரதமரைச் சந்திக்கிறார்!

முதல்வர் விஜய் தில்லிக்கு 2 நாள் அரசுமுறைப் பயணம்...

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய். - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 10:07 am IST

தமிழக முதல்வரான பிறகு சி. ஜோசப் விஜய் இன்று(மே 27) முதல்முறையாக தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய், 2 நாள் பயணமாக இன்று தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அங்கு பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை 4 மணியளவில் சந்திக்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதி விடுவிப்பு, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் நேரில் சென்று கோரிக்கை வைக்கவுள்ளார்.

அதேபோல காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் மரியாதை நிமித்தமாக விஜய் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Chief Minister Vijay Departs for Delhi to meet pm modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.