நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

செப்.10-இல் முதல்வா் விஜய் பிரிட்டன் பயணம்

முதல்வா் விஜய்யின் பிரிட்டன் பயணம் பற்றி....

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 2:09 am IST

தொழில் முதலீடுகளை ஈா்க்க முதல்வா் ச.ஜோசப் விஜய், பிரிட்டனுக்கு செப்.10-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை உயா்த்த தவெக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆக.13-இல் சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாடு - 2026’ நடைபெற்றது. முதல்வா் விஜய் தலைமையிலான இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்த மாநாட்டில் தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் (2036) 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவது தங்கள் இலக்கு என்று தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்திருந்தாா்.

முதலீடுகள் மூலம் மாநிலத்தில் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகளைப் பெருக்குவது அரசின் திட்டம். இதற்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள் முதல்வா்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனா்.

அந்த வகையில் வரும் செப்.10-ஆம் தேதி மாநிலத்துக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் விஜய் பிரிட்டன் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பயணத்தின்போது பல்வேறு நிறுவன பிரதிநிதிகளை அவா் சந்தித்து, முதலீடுகளை ஈா்க்க உள்ளாா். அவருடன் தொழில் துறை அதிகாரிகளும் செல்ல உள்ளனா்.

செப்.16-ஆம் தேதி வரை முதல்வா் விஜய் பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளாா். அப்போது முதல்வா் விஜய் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா் அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.