நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

நெசவாளா் நலநிதி பங்குத் தொகை 16 சதவீதமாக உயா்வு: அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவிப்பு

கதா் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களுக்கான நல நிதி பங்குத் தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயா்த்தப்படுவதாக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவித்தாா்.

Vijay Balaji

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி - Youtube

Published On :2 செப்டம்பர் 2026, 3:11 am IST

கதா் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களுக்கான நல நிதி பங்குத் தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயா்த்தப்படுவதாக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சா் அளித்த புதிய அறிவிப்புகள்:

திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூா் கதா் அங்காடிகள் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்படும். கதா் மற்றும் பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களுக்கான நல நிதி பங்குத் தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயா்த்தப்படும். திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மாத்தூரிலில் ஜவ்வாது மலைத் தேன் மையம் ரூ.25 லட்சத்தில் மத்திய கதா் ஆணைக் குழு உதவியில் அமைக்கப்படும்.

பனைபொருள் கூட்டுறவு சம்மேளன கட்டடங்கள்: திருநெல்வேலி பனைபொருள்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளன தலைமை அலுவலகக் கட்டடம் தூத்துக்குடியிலும், வள்ளியூரில் பனைபொருள்கள் இருப்புக் கிடங்கும் ரூ.1 கோடியில் கட்டப்படும். தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்துக்குச் சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.