FOLLOW US

ON GOOGLE DISCOVER

சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் தம்பிதுரை வலியுறுத்தல்

ஓசூரில் நடைபெற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சர் தம்பிதுரை கலந்துகொண்டு பேசியது பற்றி...

Former Minister Thambidurai

ஓசூரில் நடைபெற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சர் தம்பிதுரை... - DIN

Published On :3 செப்டம்பர் 2026, 1:23 pm IST

ஓசூர்: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே நடத்த வேண்டும் என்று முன்னாள் மக்களவை துணைத் தலைவரும், முன்னாள் கல்வி அமைச்சருமான மு. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

​ஓசூரில் நடைபெற்ற அதியமான் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் தெரிவித்ததாவது:

காலதாமதமாகும் கலந்தாய்வு:

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதத்திலேயே வெளியிடப்பட்ட போதிலும், பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மருத்துவக் கலந்தாய்வை காரணம் காட்டி பொறியியல் கலந்தாய்வு தாமதப்படுத்தப்படுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது.

Story image

​தனியார் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள்: அரசு கலந்தாய்வு தாமதமாவதால், இடங்கள் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து விடுகின்றனர்.

காலியாகும் இடங்கள்: இதன் விளைவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் காலியாகும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அரசுகளுக்குக் கோரிக்கை: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்வி ஆண்டை ஆகஸ்ட் மாதத்திற்குள் முறையாகத் தொடங்க வேண்டும். எனவே, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மாணவர் சேர்க்கை நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, கலந்தாய்வை விரைந்து நடத்தி முடிக்க உரிய கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

​மேலும், மாணவர்கள் பட்டங்களை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், உலகளாவிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தங்களுடைய தனித்திறன்களை (Skill Development) வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெளிநாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

Summary

Engineering counseling should be conducted earlier: Former Minister Thambidurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.