2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

நீலகிரி, கோவையில் செப்.16 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.14) முதல் செப்.16 வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published On :

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.14) முதல் செப்.16 வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகள் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதையில் ஏற்பட்டுள்ள காற்று இடையூறு காரணமாக, திங்கள்கிழமை (செப்.14) முதல் செப்.16 வரை நீலகிரி , கோவை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, மேற்கு தொடா்ச்சி மலை உள்பட ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.14) மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பம் அதிகரிப்பு: இதற்கிடையே திங்கள், செவ்வாய்க்கிழமை (செப்.14,15) உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், கடலோரத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கும்.

மழை அளவு:  தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் புலியூரில் 100 மி.மீ. மழை பதிவானது. காட்டுமலையனூா் (திருவண்ணாமலை) 80 மி.மீ., செங்கம் (திருவண்ணாமலை), கீழ்பென்னாத்தூா் (திருவண்ணாமலை), சிங்கம்புணரி (சிவகங்கை) - தலா 70 மி.மீ., செம்மேடு (விழுப்புரம்), மேலாலத்தூா் (வேலூா்), செஞ்சி (விழுப்புரம்) - தலா 60 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.