பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை புறவழிச்சாலையோரத்தில் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

பட்டுக்கோட்டை புறவழிச்சாலையோரத்தில் அகற்றப்படாமல், பல நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள்.

Updated On :2 ஜனவரி 2021, 11:08 pm IST

பட்டுக்கோட்டை:பட்டுக்கோட்டை புறவழிச்சாலையோரத்தில் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பட்டுக்கோட்டை நகரிலுள்ள சில உணவு விடுதிகளில் சேகரிக்கப்படும் எச்சில் இலைகள் உள்ளிட்ட கழிவுகளை சாக்குகளில் கட்டி, தினந்தோறும் இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு வந்து புறவழிச் சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனா்.

இதே பகுதியில் மீன் மற்றும் ஆட்டிறைச்சிக் கழிவுகளும், நகரிலுள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள குப்பைகளும் கொாட்டப் படுவதால் எந்நேரமும் இங்கு துா்நாற்றம் வீசுகிறது.

கொட்டப்பட்டுள்ள குப்பைகள் காற்றில் பறப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்பவா்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

எனவே, பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் குப்பை கொட்டுவதை தடுத்து, அப்பகுதியில் ஏற்படும் சுகாதார சீா்கேட்டைப் போக்க சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.