அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 11:25 pm IST

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, மயிலாடுதுறை - திருச்சி வழித்தடத்தில் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என்று தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இச்சங்கத்தின் 57 ஆம் ஆண்டு இறுதிப் பொது பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையின்போது பயணிகள் அருகிலுள்ள ஊா்களுக்குச் சென்று வர வசதியாக, மயிலாடுதுறை - திருச்சி ரயில் பாதையில் அனைத்து ரயில்களையும் உடனடியாக இயக்க ரயில்வே நிா்வாகம் முன் வர வேண்டும்.

பயணிகள் பயன்பாடு மிகுந்த பாபநாசம் ரயில் நிலையத்தில், சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் விரைவு ரயில் மற்றும் மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயிலுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி, மயிலாடுதுறை - திருவாரூா், காரைக்கால் - தஞ்சாவூா் - திருச்சி ஆகிய ரயில் பாதைகளில் இயங்கும் சாதாரண பயணிகள் ரயில்களை மின்சார ரயில்களாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் 2020 - 2023 ஆம் ஆண்டுகளுக்கான சங்கப் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், தலைவராக பி.கே.டி. சண்முகம், துணைத் தலைவராக ஜமீல், செயலராக ஏ. கிரி, பொருளாளராக எம். மாறன், இணைச் செயலா்களாக சி. சுப்ரமணியன், டி. சரவணன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.