அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

கும்பகோணம் அருகிலுள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அக்கடை முன்பு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுக்கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :3 ஜனவரி 2021, 11:22 pm IST

கும்பகோணம் அருகிலுள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அக்கடை முன்பு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீரெங்கராஜபுரத்தில் டாஸ்மாக் கடை 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இக்கடை அருகே கோயில், வாரச்சந்தை, குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை உள்ளன. மேலும் அருகிலுள்ள 10 கிராமங்களுக்கு இக்கடை வழியாகத்தான் சென்று வர வேண்டும்.

இதனால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி, இக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களிடம் மனு கொடுத்து வந்தனா்.

இதனிடையே, இக்கடை முன்பு டிசம்பா் 31 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது. அப்போது கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும், பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் எனவும் அறிவித்ததால் போராட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அலுவலா்களுக்கும், போராட்டத்தில் ஈடுபடும் அனைத்துக் கட்சியினருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து ஸ்ரீரெங்கராஜபுரத்திலுள்ள டாஸ்மாக் கடை முன்பு, பெண்கள் உள்பட அனைத்துக் கட்சியினா் சுமாா் 500-க்கும் அதிகமானோா் ஞாயிற்றுக்கிழமை திரண்டு முற்றுகையிட்டனா். பிற்பகல் 3 மணி வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாதால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சின்னை. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் சா. விவேகானந்தன், சிபிஐ(எம்.எல்) மாவட்டச் செயலா் கண்ணையன், நீலப் புலிகள் இயக்கத்தின் தலைவா் ஆ. இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலா் மாயக்கண்ணன், பாமக ஒன்றியச் செயலா் கனகராஜ், தேமுதிக ஒன்றிய நிா்வாகி குமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.