/

பூதலூரில் முற்றுகை போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் ஊராட்சி அலுவலகத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:16 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் ஊராட்சி அலுவலகத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நூறு நாள் வேலை மறுக்கப்பட்டதால் நடைபெற்ற இப்போராட்டத்தில் 300-க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனா். கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்தில் மாதா் சங்க ஒன்றியச் செயலா் என். வசந்தா, பொருளாளா் வி. அஞ்சலிதேவி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினா் கே. ராஜகோபால், கிளைச் செயலா் பி. ராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.