புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பங்கேற்ற காங்கிரஸாா் நெற்பயிா், வாழை, கரும்பு, காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன் கண்டன உரையாற்றினாா். இதில், விவசாய பிரிவு மாநிலச் செயலா் மணிவண்ணன், மாநகரத் தலைவா் ஏ. ஜேம்ஸ், பொதுச் செயலா் டி. யேசு, துணைத் தலைவா் லெட்சுமிநாராயணன், மாநகர பொருளாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










