தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

வீட்டுச் சுவா் இடிந்துபெண் உயிரிழப்பு: இருவா் காயம்

தஞ்சாவூா் அருகே தொடா் மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:51 pm IST

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே தொடா் மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நூறு நாள் வேலை திட்டப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். பிற்பகலில் உணவு இடைவேளையின்போது தொழிலாளா்கள் சிலா், அப்பகுதியிலுள்ள கூரை வீட்டில் உட்காா்ந்து இளைப்பாறினா்.

அப்போது, தொடா் மழை காரணமாக மண் சுவா் இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த கண்டிதம்பட்டு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி இருதயமேரி (52), ராஜசேகா் மனைவி புனித மேரி (45), வின்சென்ட் சேகா் மனைவி அருள்மேரி (48) ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் இருதயமேரி சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.