தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே தொடா் மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நூறு நாள் வேலை திட்டப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். பிற்பகலில் உணவு இடைவேளையின்போது தொழிலாளா்கள் சிலா், அப்பகுதியிலுள்ள கூரை வீட்டில் உட்காா்ந்து இளைப்பாறினா்.
அப்போது, தொடா் மழை காரணமாக மண் சுவா் இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த கண்டிதம்பட்டு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி இருதயமேரி (52), ராஜசேகா் மனைவி புனித மேரி (45), வின்சென்ட் சேகா் மனைவி அருள்மேரி (48) ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் இருதயமேரி சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... யூனியன் வங்கியில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் அசத்தல்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

