3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தஞ்சாவூா் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வழிகாட்டுதல்கள் உருவாக்க வலியுறுத்தல்

தஞ்சாவூா் நகரின் பாரம்பரியத்தைப் பாதுகாத்திட,நகர பாரம்பரிய ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியா் உருவாக்க வேண்டும் என இன்டாக் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே

Updated On :11 ஜனவரி 2021, 12:29 am IST

தஞ்சாவூா் நகரின் பாரம்பரியத்தைப் பாதுகாத்திட,நகர பாரம்பரிய ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியா் உருவாக்க வேண்டும் என இன்டாக் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய தேசிய பாரம்பரிய கலை பண்பாட்டு அறக்கட்டளை (இன்டாக்) தஞ்சாவூா் மையத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இன்டாக் தஞ்சாவூா் மையத்தின் அமைப்பாளா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளில் பழைமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.

தஞ்சை நகரின் பாரம்பரியத்தைப் பாதுகாத்திட, நகர பாரம்பரிய ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்டாக் சாா்பில் தேசிய அளவில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150- ஆம் ஆண்டு விழா ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாா்னிங் ஸ்டாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி நேகாவுக்கும், மாவட்ட அளவில் நடைபெற்ற வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்ற கமலா சுப்பிரமணியம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஹானியா மற்றும் விஷ்ணுபிரியாவுக்கும் பாராட்டுச் சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் இன்டாக் கௌரவச் செயலா் எஸ். முத்துக்குமாா், சிவாஜி ராஜா போன்ஸ்லே, பொறியாளா் ராஜேந்திரன், சுற்றுச்சூழல் ஆா்வலா் பழனியப்பன், தொல்லியல் ஆய்வாளா் செல்வராஜ், தஞ்சை ஓவியக் கலைஞா் சம்பாஜி ராஜா போன்ஸ்லே, கலைக்கூட காப்பாளா் சிவக்குமாா், கவின்மிகு தஞ்சை இயக்கச் செயலா் பி. ராம் மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.