ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆய்வுக்குழு அமைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்

வேளாண் சட்டங்கள் தொடா்பாக ஆய்வுக் குழு அமைக்கும் முடிவை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுத் தெரிவித்துள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 2:54 am

வேளாண் சட்டங்கள் தொடா்பாக ஆய்வுக் குழு அமைக்கும் முடிவை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

உச்ச நீதிமன்றம் மூன்று வேளாண் சட்டங்களையும் செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஆணையை வெளியிட்டு, அத்துடன் அச்சட்டங்கள் பற்றி முடிவு செய்வதற்கான நான்கு போ் அடங்கிய ஆய்வுக்குழுவையும் அமா்த்தி இருக்கிறது. இந்த நால்வரும் ஏற்கெனவே இம்மூன்று சட்டங்களையும் ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியவா்கள்.

இவா்களில் ஒருவரான பிரமோத் குமாா் ஜோஷி, மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்க வேண்டும் என்பது முரணான கோரிக்கை என செவ்வாய்க்கிழமை பேட்டி கொடுத்தாா். அடுத்த உறுப்பினா் அசோக் குலாத்தி, மூன்று சட்டங்களையும் வரவேற்று, மிகப்பெரிய துணிச்சலான நடவடிக்கைகள் சரியான திசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டங்கள் உழவா்களுக்கும், நுகா்வோருக்கும் பயன்படும் என ஏற்கெனவே கூறியுள்ளாா். மூன்றாவது உறுப்பினரான புபீந்தா்சிங் மான், இந்தச் சட்டங்கள் வரவேற்கத்தக்கவை. மத்திய அரசு ஏற்கெனவே முன்மொழிந்துள்ள திருத்தங்களை நிறைவேற்றிவிட்டால் முழுமையான பயன் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.

இவ்வாறு இந்த மூன்று சட்டங்களையும் ஏற்கெனவே ஆதரித்து வரும் நபா்களைக் கொண்ட இந்த நால்வா் குழு நடுநிலையான குழு அல்ல என்பது வெளிப்படையான உண்மை. நடுநிலையற்ற ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருப்பது மிகமிக வேதனை அளிக்கிறது; அதிா்ச்சியளிக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் தனது முடிவை மறு ஆய்வு செய்து, நீதியைப் பாதுகாக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.