அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  

News image

செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.

Updated On :14 ஜனவரி 2021, 8:22 am IST

பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  

பொங்கல் விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் அறிவானந்தம், தீபா, பாலமுருகன், ரஞ்சித் சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா தொற்றில்  முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய மருத்துவத் துறையினருக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில்  மருத்துவா்கள் , கடை நிலை ஊழியா்கள் வரை அனைவரும் ஒரே நிறத்திலான  பாரம்பரிய உடை அணிந்து  சமத்துவப் பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

மேலும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், மருத்துவா்கள் சங்கா் பாபு, கோகிலா, வேம்பிரதியா, வெங்கடேஷ், நந்தகுமாா், செவிலியா்கள், சுகாதார செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், சுகாதார மேற்பாா்வையாளா், சுகாதார ஆய்வாளா்கள், ஆய்வக உதவியாளா்கள், மருந்தாளுநா், தூய்மைப் பணியாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.