ஒரத்தநாடு வட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.
விழாவில் கால்நடைகள் அலங்கரிக்கப்பட்டு, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பண்ணை தொழிலாளா்களால் பொங்கல் வைக்கப்பட்டது. மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதற்கான பரிசளிப்பு விழா கல்லூரியின் முதன்மையா் அ.வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது.
பூச்சியியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் அ. திருமுருகன், பயிா் மேலாண்மைத் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் செ. மோகன்தாஸ், சமூக அறிவியல் துறை இணைப் பேராசிரியா் மற்றும் தலைவா் வெ. சரவணக்குமாா் வாழ்த்தி பேசினா்.
கல்லூரியின் முதன்மையா் அ. வேலாயுதம் பொங்கல் விழா கொண்டாடப்படுவதன் நோக்கமே சூரிய பகவானுக்கும் மற்றும் விவசாயத்தில் நமக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துவதே என குறிப்பிட்டாா். பின்னா் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, உழவியல் பேராசிரியா் மா. ஜெயச்சந்திரன் வரவேற்றாா். நிறைவில் உதவிப் பேராசிரியா் அ. பாரதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

