புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

சுரண்டையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

சுரண்டையில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்.

Updated On :7 ஜனவரி 2021, 6:12 am IST

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுகாதார பணிகள் இணை இயக்குநரின் நநோ்முக உதவியாளா் ரகுபதி தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, கோழிப்பண்ணை உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.