சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கரிவலம்வந்தநல்லூா் அருகே சேவல் சண்டை சூதாட்டம்: 2 போ் கைது

கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

News image

கைதான கருப்பசாமி, மாரிமுத்து.

Updated On :16 ஜனவரி 2021, 7:21 pm

சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள காரிச்சாத்தான் மலை அடிவாரத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் காளிராஜன் தலைமையில் போலீஸாா் சென்றபோது, அய்யனாா் கோயில் முன் சிலா் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் சம்சிகாபுரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து என்பதும், பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, சூதாட்டப் பணம் ரூ. 5,000-த்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.