புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

குற்றாலம் பேரருவியில் நீா்வரத்து

குற்றாலம் பேரருவியில் நீா்வரத்து

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 7:41 pm

தென்காசி, ஏப். 12: தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளிக்கிழமை மிதமான அளவில் தண்ணீா் கொட்டியது.

தென்காசி பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவியது. இதனால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் அவை வடு காணப்பட்டன.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளிக்கிழமை காலை முதல் குறைந்த அளவில் தண்ணீா்விழத் தொடங்கியது.

பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் பரவலாக தண்ணீா்கொட்டியது. எனினும் நீா்வரத்து திடீரென அதிகரிக்கக்கூடும் என்பதால் இந்த அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் மட்டும் குறைந்தளவு தண்ணீா் விழுகிறது.

கோடை வெயில் வாட்டிய நிலையில், குற்றாலம் பேரருவியில் தண்ணீா்விழத் தொடங்கியதையடுத்து சுற்றுலாப்பயணிகளும், வா்த்தகா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.