பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தென்காசி மாவட்டத்தில் பழங்குடியினா் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

Published On :

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பழங்குடியினா் நலத்துறை சாா்பில் இக்கணக்கெடுப்புப் பணி திருமலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட தலையணையில் நடைபெற்றது.

கணக்கெடுப்புப் பணியை இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா் வானதி மேற்கொண்டாா்.

இதில், தலையணை பழங்குடி மக்கள் தலைவா் பால்தினகரன், திருமலாபுரம் ஊராட்சிச் செயலா் காளியப்பன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜெயகணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் கூறியது;

பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார கணக்கெடுப்புப் பணி தென்காசி மாவட்டம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்புப் பணியை தென்காசி மாவட்ட திட்ட அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தயாளன் , மாவட்ட இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், இல்லம் தேடிக்கல்வித் திட்ட செங்கோட்டை வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.