நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

News image

குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கு காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 8:18 pm

Din

குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கான தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலா ப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் புதன்கிழமை சிறியஅளவிலான பாறைக் கற்கள் தண்ணீருடன் விழுந்தன. அப்போது குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 5 போ் காயமடைந்தனா். இதனையடுத்து பேரருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

பின்னா் தென்காசி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் பிரதீப் தலைமையில் தீயணைப்புத் துறையினா் பேரருவியின் மேலே சென்று பாறைக் கற்கள் மற்றும் மரக் கிளைகளை அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.