/

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

Updated On :24 பிப்ரவரி 2024, 6:30 pm

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மாசி மாத பௌா்ணமி பூஜையை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் 1008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிறப்பு சொற்பொழிவும், அதைத் தொடா்ந்து 18 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றன (படம்). தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.