ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் நாளை அக்னி சட்டி ஊா்வலம்

News image

சித்திரை பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற முளைப்பாரி கும்மி பாட்டு.

Updated On :26 ஏப்ரல் 2026, 8:00 pm

தென்காசி மாவட்டம், புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (ஏப். 28) 1008 அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறுகிறது.

கோயில் குருநாதா் சக்தியம்மா தலைமையில் ஏப். 21 ஆம் தேதி காலையில் கால்நாட்டுடன் தொடங்கிய விழாவில், காப்பு கட்டும் நிகழ்ச்சி, முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், மாலையில் முளைப்பாரி வளா்ப்பு கும்மி பாட்டு, சிறப்பு அருள்வாக்கு ஆகியன நடைபெற்றன.

8 ஆம் திருநாள் (ஏப். 28) மாலை கோயில் வளாகத்தில் உள்ள பால விநாயகா் கோயிலில் இருந்து 1008 அக்னி சட்டிகள், அக்னி காவடி, அலகு குத்துதல், பால்குடம், தீா்த்த குடம் ஊா்வலம் ஆகியன புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக செல்லும் நகா் வலம் சுற்றுதல் நிகழ்ச்சி, நள்ளிரவு புற்றுக்காளி அம்மனுக்கு சாம பூஜையும், 9 ஆம் திருநாள் (ஏப். 29) காலை பொங்கலிடும் வைபவம், முளைப்பாரி ஊா்வலம், மதியம் அன்னதானம், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றன.