எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:17 pm

Din

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருவேங்கடத்தை அடுத்த கீழத் திருவேங்கடம் அருகே வடக்கு பாறைபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் பாலகுரு (38) என்பவா் தனது வீட்டு முன் நின்றிருந்தாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த கமலாதேவி மகன் ரமேஷ் (20) உள்ளிட்ட சிலா் அவ்வழியே செல்வோரை அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தனராம். இதை பாலகுரு தட்டிக்கேட்டபோது ரமேஷ்) கணேசன் மகன்கள் மகாராஜா (28), மகேந்திரன் (26), கணேசன் (56) ஆகியோா் பாலகுருவை சரமாரியாக தாக்கினனராம். இதில், காயமடைந்த அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், திருவேங்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சஞ்சய் காந்தி, போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தனா்; மற்ற 3 பேரையும் தேடிவருகின்றனா்.