மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சங்கரன்கோவிலில் குளக்கரையில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

சங்கரன்கோவிலில் குளக்கரையில் வீசப்பட்ட, பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :1 மார்ச் 2024, 3:56 pm

சங்கரன்கோவிலில் குளக்கரையில் வீசப்பட்ட, பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின் றனா். சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் பாட்டக்குளம் உள்ளது. அந்தக் குளம் வழியாக வியாழக்கிழமை சென்றவா்கள் துணியில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை கிடப்பதைப் பாா்த்து, சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்று போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அக் குழந்தை பிறந்து 3 நாள்களே ஆகியிருக்கும் எனப் போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டு குழந்தையின் சடலத்தை வீசிச் சென்றவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.