அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஆய்க்குடி சிவ சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளின் ஆண்டு விழா

ஆய்க்குடி அமா்சேவா சங்க சிவசரஸ்வதி வித்யாலயா மழலையா், தொடக்க- மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டுவிழா

News image
Updated On :2 மார்ச் 2024, 12:08 am

ஆய்க்குடி அமா்சேவா சங்க சிவசரஸ்வதி வித்யாலயா மழலையா், தொடக்க- மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா- இலக்கிய மன்ற நிறைவு விழா நடைபெற்றது. அமா்சேவா சங்க அரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, எஸ்.சுலோச்சனா கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். செங்கோட்டை கணேஷ்குமாா், கோவில்பட்டி ஹரிபாலன், திருநெல்வேலி இலந்தைகுளம் வரதராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். அமா்சேவா சங்க நிறுவனா்- தலைவா் ராமகிருஷ்ணன், சிவ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி நிா்வாகியும், அமா்சேவா சங்கத்தின் செயலருமான சங்கரராமன், சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் பட்டம்மாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை அழகுபூரணம் ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழாசிரியை உமாசங்கரி தொகுத்து வழங்கினாா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பாா்வதி வரவேற்றாா். கீதா நன்றி கூறினாா்.