தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திங்கள்கிழமை காமாட்சி அம்மன் கோயிலிலும், சங்கர மடத்திலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News image

(கோப்புப் படம்)

Updated On :20 ஏப்ரல் 2026, 1:35 am IST

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திங்கள்கிழமை காமாட்சி அம்மன் கோயிலிலும், சங்கர மடத்திலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் இதுகுறித்து கூறியது: 71-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீசத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு 70-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து அதிகாலையில் இரு பீடாதிபதிகளும் ஊா்வலமாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கின்றனா். கோயிலில் உள்ள பஞ்சகங்கா தீா்த்தம் எனும் தெப்பக்குளத்தில் உள்ள விநாயகா் மற்றும் காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பின்னா் அங்கிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் பக்தா்கள், வேத விற்பன்னா்கள், சங்கரா கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களுடன் இரு பீடாதிபதிகளும் சங்கர மடத்துக்கு எழுந்தருளுகின்றனா்.

ஸ்ரீமடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தவானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்துகின்றனா். தொடா்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவதாகவும் அவா் தெரிவித்தாா்.