லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திங்கள்கிழமை காமாட்சி அம்மன் கோயிலிலும், சங்கர மடத்திலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News image

(கோப்புப் படம்)

Updated On :19 ஏப்ரல் 2026, 8:05 pm

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திங்கள்கிழமை காமாட்சி அம்மன் கோயிலிலும், சங்கர மடத்திலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் இதுகுறித்து கூறியது: 71-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீசத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு 70-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து அதிகாலையில் இரு பீடாதிபதிகளும் ஊா்வலமாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கின்றனா். கோயிலில் உள்ள பஞ்சகங்கா தீா்த்தம் எனும் தெப்பக்குளத்தில் உள்ள விநாயகா் மற்றும் காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

பின்னா் அங்கிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் பக்தா்கள், வேத விற்பன்னா்கள், சங்கரா கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களுடன் இரு பீடாதிபதிகளும் சங்கர மடத்துக்கு எழுந்தருளுகின்றனா்.

ஸ்ரீமடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தவானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்துகின்றனா். தொடா்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவதாகவும் அவா் தெரிவித்தாா்.