/
காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் 2-ஆவது ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி, 108 கலாசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.
பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது பழைமையான ஆதி காமாட்சி ஆதி பீடா பரமேசுவரி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 2-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, காலையில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் 108 கலசாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், பின்னா் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
மாலையில் உற்சவா் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் ரவி என்ற ஏழுமலை தலைமையிலான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காஞ்சி சங்கராசாரியாரிடம் நாகலாந்து ஆளுநா் ஆசி

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம்

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



