தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆய்க்குடி அமா்சேவா சங்க குழந்தைகளுக்கு புதன்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
முன்னாள் மாவட்ட துணைச் செயலா் ஆயான் எஸ்.நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் முருகையா, பேரூராட்சி மன்றத் தலைவா்கள் சுந்தர்ராஜ் (ஆய்க்குடி), காளியம்மாள் செல்வகுமாா்(சுந்தரபாண்டிபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் மதிய உணவுவழங்கினாா்.
மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ராஜேந்திரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் சங்கா், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மோகன்ராஜ் கலந்து கொண்டனா். தென்காசி நகா்மன்ற உறுப்பினா் ஆசாத் நகா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா்
புதிதாக மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வரவேற்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


