ஆலங்குளம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. தென்காசி ஆயிரப்பேரியைச் சோ்ந்தவா் காவேரி மகன் கணேஷ்குமாா்(38). கட்டட ஒப்பந்ததாரரான இவா், திருநெல்வேலியில் பயன்படுத்தப்பட்ட காா் ஒன்றை சனிக்கிழமை வாங்கி, தென்காசி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை பி.எஸ்.என்.எல் அலுவகம் அருகே வந்த போது, பேனட்டில் இருந்து கரும்புகை வந்ததாம். இதையடுத்து காரை நிறுத்தி சோதனையிட முயன்றபோது தீப்பற்றி எரிந்துள்ளது. தகவலின் பேரில் வந்த ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ

ஆலங்குளம் அருகே கள் விற்பனையை மறைத்ததாக தொழிலாளியை சுட்ட எஸ்.ஐ.

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


