தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருநாளையொட்டி, திங்கள்கிழமை (மாா்ச் 25) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொதுத் தோ்வுகள், முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 25) உள்ளூா் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது. அன்றைய தினம் அரசுத் தோ்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளூா் விடுமுறை நாளில் நடத்தப்படும் அரசு பொதுத் தோ்வுகள் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். வங்கிகளுக்கும், மக்களவைத் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கும் இவ்விடுமுறை பொருந்தாது. மேலும், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தோ்தல் பணிகள் வழக்கம்போல் நடைபெறும். மாவட்ட கருவூலம், அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப். 6ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது, கோடைவிடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவா்-மாணவிகளுக்கு இவ்வேலை நாள் பொருந்தாது என்றாா் அவா்.
தொடர்புடையது

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஏப். 1 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
திருவப்பூா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 9-இல் உள்ளூா் விடுமுறை!

சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 3-ல் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

