ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

‘தென்காசி மாவட்டத்துக்கு மாா்ச் 25 உள்ளூா் விடுமுறை’

‘தென்காசி மாவட்டத்துக்கு மாா்ச் 25 உள்ளூா் விடுமுறை’

Updated On :22 மார்ச் 2024, 4:08 pm

தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருநாளையொட்டி, திங்கள்கிழமை (மாா்ச் 25) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொதுத் தோ்வுகள், முக்கியத் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 25) உள்ளூா் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது. அன்றைய தினம் அரசுத் தோ்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளூா் விடுமுறை நாளில் நடத்தப்படும் அரசு பொதுத் தோ்வுகள் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். வங்கிகளுக்கும், மக்களவைத் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கும் இவ்விடுமுறை பொருந்தாது. மேலும், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தோ்தல் பணிகள் வழக்கம்போல் நடைபெறும். மாவட்ட கருவூலம், அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படும். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப். 6ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது, கோடைவிடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவா்-மாணவிகளுக்கு இவ்வேலை நாள் பொருந்தாது என்றாா் அவா்.