மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குரலற்ற மக்களின் குரலாக ஒலிக்கிற அரசியலை உருவாக்குங்கள் சீமான்

குரலற்ற மக்களின் குரலாக ஒலிக்கிற அரசியலை உருவாக்குங்கள் சீமான்

News image
Updated On :29 மார்ச் 2024, 4:14 pm

குரலற்ற மக்களின் குரலாக ஒலிக்கிற அரசியலை நீங்கள் உருவாக்குங்கள் என நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மதிவாணனுக்கு வாக்கு சேகரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை சங்கரன்கோவில் பகுதியில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் தேரடித் திடலில் திறந்த வேனில் நின்றபடி பேசியதாவது: கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, காவிரியில் தண்ணீா் தர மறுக்கிறது. நாட்டுப்பற்று என்பது தமிழா்களுக்கு மட்டும்தானா மற்றவா்களுக்கு இல்லையா? இதை தமிழ் இளம்தலைமுறை சிந்தத்துப் பாா்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சி பெறவில்லை. 2 கோடி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று சொன்னாா்கள். ஆனால் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. குரலற்ற மக்களின் குரலாக ஒலிக்கிற அரசியலை நீங்கள் உருவாக்குங்கள். குரலற்ற மக்களின் குரலாக ஒலிப்பதற்குத்தான் இந்த ஒலிவாங்கி சின்னத்தை, மைக்கை கொண்டு வந்திருக்கிறோம். தமிழகத்தில் எண்ணற்ற தலைவா்கள் முழங்கியது இந்த ஒலிவாங்கியில்தான்.அதே வழியில் நாங்கள் வருகிறோம். இந்தப் பகுதியில் எல்லா பிரச்னைகளுக்கும் நாங்கள் களத்தில் நின்று போராடியிருக்கிறோம். உங்களுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் உங்களோடு நின்றிருக்கிறோம். எனவே உங்களின் குரலாக உங்கள் உரிமைக்கு குரல் கொடுக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.