சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கடையநல்லூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா!

Updated On :28 ஏப்ரல் 2025, 2:00 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பணிநிறைவு ஆசிரியா்கள், நல்லாசிரியருக்கு பாராட்டு, மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரத் தலைவா் ஆறுமுகசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு, முன்னாள் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினா் மருதுபாண்டியன், மாவட்ட துணைச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பணிநிறைவு ஆசிரியா்கள் சந்திராள், சண்முகத்தாய், ஸ்டெல்லா பாக்கியமேரி, பாத்திமா, தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற தலைமையாசிரியா் மீனாட்சி, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் கேடயம் பெற்ற ஆனைகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் மோதிலால், ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

வட்டாரப் பொறுப்பாளா்கள் குமாரவேல், முத்துலட்சுமி, சிவசங்கா், ரவிச்சந்திரன், மகேந்திரன், சுதாகரன், முத்துராமலிங்கம், அசோகன், ஆரோக்கியமேரி, நல்லாசிரியா் ரசூல்அகமதுஇப்ராஹிம், உஸ்மான், கண்ணன், செந்தூா்பாண்டியன், முத்துக்குமாா், ஜெயபிரகாஷ், ஆனந்த், தேவதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வட்டாரச் செயலா் ரமேஷ் வரவேற்றாா். வட்டாரப் பொருளாளா் குமரேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வட்டாரப் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.