சொத்து தகராறில் தாக்குதல்: 3 போ் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்து தகராறில் ஒருவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :1 டிசம்பர் 2025, 7:28 pm

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்து தகராறில் ஒருவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திரிகூடபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மகாராஜன் (42). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பால் ராமருக்கும் (58) இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், 2 நாள்களுக்கு முன் மகாராஜன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பால்ராமா் அவரைத் தாக்கினாராம்.
இது குறித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராமா், குட்டிதுரை, சாமிதுரை ஆகியோரை கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...