47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சொத்து தகராறில் தாக்குதல்: 3 போ் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்து தகராறில் ஒருவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:28 pm

Syndication

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்து தகராறில் ஒருவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திரிகூடபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மகாராஜன் (42). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பால் ராமருக்கும் (58) இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், 2 நாள்களுக்கு முன் மகாராஜன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பால்ராமா் அவரைத் தாக்கினாராம்.

இது குறித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராமா், குட்டிதுரை, சாமிதுரை ஆகியோரை கைது செய்தனா்.