அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

யானைகளை வனத்துக்குள் விரட்ட பாதைகளை உருவாக்கத் திட்டம்

சிவகிரி வட்டார விளைநிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்கு வசதியானபாதைகளை...

News image
பாதை அமைக்க தகுதியான பகுதிகளை பாா்வையிடும் அதிகாரிகள்.
Updated On :1 டிசம்பர் 2025, 9:47 pm

Syndication

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டார விளைநிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்கு வசதியானபாதைகளை அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

சிவகிரி மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள

குவழிவழிகுளம் புரவு, ராசிங்கப்பேரி குளப்புரவு, 18 கி.மீ. சுற்றளவு உள்ள விவசாய நிலங்களில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு அந்தப் பகுதியில் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை , நெல், தென்னை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால், விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் ட்ரோன் கேமராக்கள் மூலம் யானைகள் இருக்கும் பகுதிகள் குறித்து வனத்துறையினா் ஆய்வு செய்தனா்.

பாதைகள் ஆய்வு: இந்த நிலையில் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் வகையில், விவசாய நிலப்பகுதி வழியாக வனப் பகுதிக்கு பாதை அமைப்பது குறித்து வனத் துறையினா், விவசாயிகள், பொதுப்பணித் துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் சின்ன மேற்கூறிய பகுதிகளை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.

இதுதொடா்பான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு அதனடிபடையில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.