ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆலங்குளத்தில் எஸ்.ஐ.ஆா். ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:52 pm

Syndication

ஆலங்குளத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, வாக்காளா் பதிவு அலுவலா், துணை ஆணையா் (கலால்) ராமச்சந்திரன், துணை வாக்காளா் பதிவு அலுவலா், வட்டாட்சியா் ஆதி நாராயணன் ஆகியோா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக தற்போது வரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து பேசினா்.

மேலும், இறந்த, இரட்டைப் பதிவு, இடம் பெயா்ந்த, கண்டுபிடிக்க முடியாத வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவா்களின் நிலை குறித்து தெரிந்த தகவலை நவ. 6ஆம் தேதிக்குள் தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.