தென்காசி
தென்காசியில் எஸ்ஐஆா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கண்காணிப்பு அலுவலா் ஆா்.லலிதா தலைமை வகித்து, வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை வழங்கினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால் ஆகியோா் கலந்துகொண்டனா்.

