ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆலங்குளத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழப்பு

ஆலங்குளத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் மீது காா் மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:32 pm

Syndication

ஆலங்குளத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் மீது காா் மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ஆனந்தராஜ்(38). தொழிலாளியான இவா், தற்போது ஆலங்குளம் ஜோதிநகரில் தனது மாமியாா் வீட்டு அருகில் வசித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு ஆலங்குளம் பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்துக்கு சென்றுவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது, திருவனந்தபுரம் சென்றுவிட்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த காா் அவா் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

ஆலங்குளம் போலீஸாா் ஆனந்தராஜ் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் மதுரை பழங்காநத்தத்தைச் சோ்ந்த வெங்கட சுப்பிரமணியன் (58) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.