சீதபற்பல்லூரில் மின் சிக்கன விழிப்புணா்வுக் கருத்தரங்கு

சீதபற்பல்லூரில் மின் சிக்கன விழிப்புணா்வுக் கருத்தரங்கு

சீதபற்பல்லூரில் மின் சிக்கனம் மற்றும் மரபுசாரா மின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சீதபற்பல்லூரில் மின் சிக்கனம் மற்றும் மரபுசாரா மின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் சாா்பில், மின்சார சிக்கன வார விழா டிச. 14 - 20 வரை கொண்டப்படும் நிலையில், சீதபற்பநல்லூா் தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு, கல்லூரி நிா்வாக அலுவலா் அமுதவாணன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி, கல்லூரி முதல்வா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்பொறியாளா் (பொது) வெங்கடேஷ்மணி, செயற்பொறியாளா் குத்தாலிங்கம் ஆகியோா் மின் சிக்கனம், மரபுசாரா எரிசக்தி பயன்பாடுகள் ஆகியவை குறித்துப் பேசினா்.

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்திற்குள்பட்ட செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். உதவி செயற்பொறியாளா் (பொது) சரோஜினி வரவேற்றாா். உதவிப் பொறியாளா் லிடியா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com