விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆலங்குளம் அருகே தொழிலாளி மா்ம மரணம்

ஆலங்குளம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

ஆலங்குளம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இளவேந்தன் (17), தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றவா், மறுநாள் அதிகாலை வரை வீடு திரும்பவில்லையாம். இதனால், பல்வேறு பகுதிகளில் உறவினா்கள் தேடியுள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை ரெட்டியாா்பட்டி-காடுவெட்டி சாலையில் பலத்த காயங்களுடன் இளவேந்தன் சடலமாகக் கிடந்தாராம். அவரது இரு சக்கர வாகனம் அங்கிருந்து சிறிது தொலைவில் கிடந்துள்ளது.

தகவலறிந்த ஊத்துமலை போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.